Tuesday, April 8, 2008

அட்டமா சித்தி என்றால் என்ன?

அட்டமா சித்தி என்றால் என்ன?
அட்டமா சித்தி எட்டு வகையான அபுர்வ சக்திகளை சித்தர்கள் தங்களது தவ வலிமையாலும் இறைவனின் அருளாலும் பெறப் பட்டதே அட்டமா சித்தி எனப்படும். எட்டு வகையான சித்திகளின் பெயர்கள் வருமாறு:

1. அணிமா - உடலைப் பஞசினும் ஒய்யதாக மாற்றி பிறர் கண்களுக்குத் தோன்றாது மறைத்தல்.
2. மகிமா - உடலை புதாகாரமாகத் தோன்றச் செய்தல்.
3. கரிமா - உடலை யானையைப் போன்று கனமாக்குதல்.
4. லகுமா - உடலை தக்கையைப் போல் இலேசாக்குதல்.
5. பிராப்தி - தமது ஆற்றலால் வெயில் மழை முதலிய கால நிலைகளை மாறச் செய்தல்.
6. பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல்.
7. ஈசத்துவம் - ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல்.
8. வசித்துவம் - தெய்வங்களைத் தன் வயப்படுத்துதல்
.
மேற் கொடுக்கப் பட்டுள்ள எட்டு விதமான அபூர்வ சக்திகளைக் கொண்டு சித்தர்கள் நம்பமுடியாத பல அதிசயங்களை செய்தனர். இன்றும் நம்மோடு வாழ்ந்து வரும் பல சித்தர்கள் சூட்சுமான வாழ்க்கையோடு வாழ்கிறார்கள்.

1 comments:

Anonymous said...

is there any school to teach siddis
do siddars come forward openly to teach the community for betterment
why they are hidden.
why do we praise them?
due to fear?
for selfish benefits ?
are they learned.
how they differ from sadhus,rishis,tapaswis,meditators,googsamaritans
what is the place of RAMANA in siddar clan
G.PARTHASARAHY.
CONTD